உடல் ஆரோக்கியத்திற்கு தேவையானவை ....

  1. எப்பொழுதும் பொறுமையுடன், மனதில் திருப்தியுடன் (Satisfaction),  நேர்மறை எண்ணங்களுடன் (Positive thinking) ,  தனது   ஆரோக்கியத்தில் நம்பிக்கையுடன் (Confidence),  மற்றும் கூடிய வரை மகிழ்ச்சியுடன் (Happiness ) இருப்பது
  2. உடலில் இருந்து கழிவு நீக்கம் - மலம்  , மூத்ரம் மட்டுமல்லாமல் சளி,  கோழை , வாந்தி,  ஆகியவற்றை தாமதிக்காமல் வெளியேற செய்வது .மேலும் நம் உடலே அதை ஆரம்பித்து செய்யும்போது (சில ஆபத்து காலங்கள் தவிர மற்ற சமயங்களில்) அதை நிறுத்த முயற்சிக்காமல், சுலபமாக  வெளியேற உடலுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது.. (உ-ம் தண்ணீர் பருகுவது)
  3. கூடியவரை இயற்கை வாழ்வியல் வாழ்ந்து அதனுடன் தேவையான அளவு த்யானம் ,  ப்ராணாயாமம்,  யோகாசனம்  செய்வது
  4. நம் நாட்டு  மூலிகைகளை தேவையான அளவுக்கு தேவையான முறைப்படி தவறாமல் பயன்படுத்துவது.. ஆயுர்வேத சாஸ்த்ர ரீதியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை தெரிந்து கொண்டு கூடிய வரை கடைப்பிடிப்பது
  5.  ஆரோக்கியத்திற்கு குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை மற்றும் சுமுகமான  மங்களகரமான சூழ்நிலை மிகவும் முக்கியம்
  1. உடலுக்கு தேவையான பஞ்ச பூதங்களை (ஆகாயம் , காற்று , தீ/ உஷ்ணம், தண்ணீர், உணவு/ப்ருத்வி)  தினமும் தேவைப்படும் போது இயற்கையிலிருந்து முழுமையாக கிடைக்க  ஒத்துழைப்பது..  மேலும் உடலுக்குள் செல்லும் காற்று,  தண்ணீர்,  உணவு ஆகியவற்றை  கூடியவரை கெமிக்கல் கலக்காமல் சுத்தமானதாக இருக்க முயற்சிப்பது 
  2. உடலில் அவ்வப்பொழுது ஏற்படும் கப , வாத , பித்தம் ஆகியவற்றின் சீற்றங்களை ஓரளவுக்கு புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்து குறிப்பாக அதற்கேற்ற உணவு உண்ணுவது
  3. அல்லோபதி மருந்து மாத்திரைகளை கூடியவரை  ஆரம்பிக்காமல் இருப்பது 
  4. (அவசர சிகிச்சை மற்றும் ஆரம்பித்து விட்ட பெரிய சிகிச்சை தவிர மற்ற  சமயங்களில் ) மேலும் ஏற்கனவே எடுத்துக் கொண்டு இருந்தால் படிப்படியாக  குறைக்க முயற்சிப்பது. அறுவை (Surgery)  போன்று பெரிய சிகிச்சைகளை செய்ய முடிவு செய்யும் முன் , கூடியவரை யோகாசன ,  இயற்கை மருத்துவத்தோடு சேர்த்து  ஆயுர்வேத/  சித்த மருத்துவ (Naturopathy  + Diet + Yogaasana + Ayurveda/ Siddha medicine) முறைகளை தீவிரமாக கடைபிடிக்க முயற்சிப்பது
  5.  தேவைப்படும்போது தற்கால மருத்துவ பரிசோதனைகளை (Diagnosis ) தவிர்க்காமல் வீட்டில் அல்லது அந்த கூடங்களில் பரிசோதனை செய்து கொள்வது.. அதன் பிறகு கூடியவரை யோகாசன , இயற்கை மருத்துவத்தோடு சேர்த்து ஆயுர்வேத/  சித்த மருத்துவ   முறைகளை (இரண்டாம் பட்சமாக ஹோமியோபதி)  கடைபிடிக்க முயற்சிப்பது. குணமாகாவிட்டால் அல்லோபதி மருத்துவத்தை கடைப்பிடிப்பது
  6.  பெரிய விபத்துக்கள் மற்றும் எமர்ஜென்சி / ஆபத்து காலங்களில் தாமதிக்காமல் தற்கால மருத்துவ முறைகளை (  Emergency/ Trauma  Care) மருத்துவமனைகளில் கடைபிடிப்பது (e.g.   Oxygen mask,  I.V. Drips, Injection of Blood  etc.)
  7. ஆண்கள் கூடியவரை ப்ரம்மசர்யம் கடைப்பிடிப்பது. கூடியவரை விந்து நஷ்டம் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்வது
  8. சுத்தமான , ஜீரணமாக கூடிய , பத்தியமான, நன்கு பக்குவமான,   போஷாக்கான  , Fresh ஆன உணவை மட்டும்,  தேவையான போது மட்டும்  மிதமான அளவு மட்டும்  உண்ணும்  முறைப்படி மௌனமாக கூடியவரை வாயை மூடிக் கொண்டு ரசித்து ருசித்து  உண்ணுவது
  9. உடலில் ப்ராண சக்தி குறையாமல் பார்த்துக் கொள்வது.. கூடியவரை அதிகமாக்க முயற்சிப்பது
  10.  உடலுக்கு அவ்வப்பொழுது தேவையான அளவு ஓய்வு உறக்கம் உடற்பயிற்சி ஆகியவற்றை தவறாமல் செய்வது